Tuesday, November 13, 2007

உலக சமாதானம்

கூடு விட்டு கூடு பாய்வது போல
நாடு விட்டு நாடு பாயும்
ஏவுகனைகள் இருக்கும் வரை!
சாத்திரம் என சொல்லி நாட்டின் சாதகத்தையே மாற்றும்
சண்டைகாரர்கள் இருக்கும் வரை!
வன்முறை என்னும் வார்த்தை
அகராதியில்இருக்கும் வரை! விண்ணில் வட்டமிடும் வாணஊர்திகள்
வீடுகளில் வீழ்த்தப்படும் வரை!
உலக சமாதானம் ஏட்டு சுரை காய் தான்...

என் பள்ளி நினைவுகள்...

விஜயதசமி நாளில்... விசித்திரமாய் இருந்தது,
அன்னை கை கொண்டு அள்ளிவந்த ஆற்று மணலில் 'அ' எழுதி
முகவரி தேடி என் பள்ளி முகப்பில் அழைப்பு மணி அடித்தது... தொடர்ந்துவந்த வாழ்நாளில் வீட்டிலே விட்டில் பூச்சீயாய் வாழ்ந்த என்னை விண்ணில் வண்ணத்து பூச்சியாய் மாற்றியது....
--MIRA

வியப்பு

மூன்று செல்லில் முந்தி அடித்துக்கொண்டுஓடும்
பொம்மை காரைமூச்சு வாங்க துரத்தும்
பல லட்சம்செல் கொண்ட குழந்தை!!!
--MIRA

Tuesday, October 9, 2007

Written for world cancer day 2005 program

இறந்து கொண்டிருக்கிறது
நேற்று மலர்ந்த மல்லிகை..
இருந்தும் மணந்து கொண்டிருக்கிறது
மரணக் கவலை இன்றி.
மலர்களே கடமை தவறாத போது மனிதர்கள் தவறலாமா?
மரணம் எனும் பாம்பு புற்று வைத்தாலும்

ரத்தம் வேகமாக சத்தம் போட்டாலும்
இடி விழுந்த மலர்களாய் இனியும் இருக்க வேண்டாம்
வாருங்கள் சிதை ஏறியும் முன்
சித்திரமாய் வாழ்ந்து காட்ட